Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு ரூபாய்க்கு அரிசி, பருப்பு, உப்பு: மத்திய அமைச்சர் வாக்குறுதி

ஏப்ரல் 14, 2019 07:32

புவனேஸ்வர்: ஒடிசாவில் பா.ஜா.க ஆட்சி அமைந்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, உப்பு ஆகியவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார். 
பார்லி.லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.  

இம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியை வீழ்த்த பா.ஜா.க வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டம் சவுத்வார் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.வை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது, 

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை வழங்கப்படும் இத்திட்டத்தால் ஒடிசாவில் 3.26 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றார்.

தலைப்புச்செய்திகள்